Monday, September 29, 2014

நவராத்திரி


நவராத்திரி என்றால் என்ன?


நவராத்திரி எனப்படுவது, எம்மைச் சுற்றியிருக்கும் பொய்மை, வெறுப்பு, பாகுபாடு, பேராசை போன்ற தீய அல்லது எதிர்மறை சக்திகளை வெற்றி கொள்வதைக் குறிக்கும் ஓர் திருவிழா ஆகும். இத் தீய சக்திகளை வெற்றிகொள்வதற்குத் தேவையான சக்தியை தியானப் பயிற்சி மூலம் பெற்றுக்கொள்ள வேண்டும். எம் மனதில் எழும் எதிர்மறை எண்ணங்களை வெற்றி பெற்று கொண்டாடப்படுவதே உண்மையான நவராத்திரியின் அர்த்தமாகும்.  

இது வருடத்தில் இரண்டு முறை கொண்டாடப் படுகிறது. வசந்தகாலத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி என்றும், குளிர்காலத்தில் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி என்றும் அழைக்கப்படுகிறது.


நவராத்திரியின் ஆன்மீக முக்கியத்துவம்



அனைத்து சிவசக்திகளும் அவர்களது யோகவலிமையால் பரமாத்மாவிடமிருந்து பெறப்பட்ட தெய்வீகசக்தி மற்றும் வலிமைகளுக்காக நினைவுகூரப்படுகின்றனர்.



Sarva mangala mangalye shive sarvartha sadhike l
Sharanye trayambake gauri, Narayani namostute ll

Meaning: O Mother ! You are the personification of all that is auspicious, You are the benevolent form of Lord Shiva, You bestow Divine energy and help people achieve Righteousness, wealth, fulfill desires and Liberation, You are worthy of being surrendered to. Three eyes adorn You. O Narayani Devi, I pay obeisance to You !