Monday, October 6, 2014

ராஜயோக தியானம் : அறிமுகம்


ஓம் சாந்தி. இந்த இரண்டு வார்த்தைகள், ராஜயோக கல்வியின் சாராம்சத்தை பிரதிபலிக்கின்றன. ஓம் என்றால் "நான் ஓர் ஆத்மா" என்றும் சாந்தி என்றால் "அமைதி" என்றும் அர்த்தமாகும். எனவே "நான் ஓர் அமைதியான ஆத்மா" என்பதை உணர்வதே அடிப்படையாகும். 

மேலோட்டமாகப் பார்த்தால் இது, வெகு இலகுவான ஒன்றாகத் தெரியலாம். ஆனால், தினசரி வாழ்வில் எம்மில் எத்தினை பேரால் இந்த நினைவில் நிலைத்திருக்க முடிகிறது? சற்று முன் கடந்துசென்ற இருபத்துநான்கு மணிநேரத்தில் மட்டும் நாம், எத்தனை முறை அமைதியை இழந்து தவித்திருப்போம்? 

பொதுவாக, அமைதிக்கான தேடலில், நாம் பெரும்பாலும் அமைதியை இழந்து தவிப்பதே பல சமயம் நடந்து வருகின்றது. ஆனால் இந்த ராஜயோக கல்வி மூலம் ஆத்மா அமைதிநிலையை வெகு சுலபமாக அடைய முடிகிறது. "ராஜயோக தியானம்" என்ற வார்த்தை பல நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருப்பினும், இக்கல்வி வெகு அண்மைக் காலத்திலேயே பெறப்பட்டதாகும். இங்கு எல்லாவற்றுக்குமே அடிப்படையான "நான் யார்?" என்ற கேள்விக்கு மிக எளிதான விளக்கம் கிடைக்கப் பெறுகின்றது.

"ராஜயோகம்" என்பதன் பொருள் பல வழிகளில் விளக்கப்படலாம். "யோகம்" என்றால் 'இணைப்பு' என்று அர்த்தம். "ராஜ" என்பதற்கு அதியுயர், அரச அல்லது முதன்மை என்று பல அர்த்தங்கள் உள்ளன. இதை கற்பதன் மூலம் இறைமையைப் பெற்றுக்கொள்வதால் இது தியானங்களின் அரசன் என அழைக்கப்படுகிறது. இதன் மூலம் பெற்றுக்கொள்ளப்படும் சக்தியானது, பிறர் மீதல்லாமல் தனது மனத்தைக் கட்டுப்படுத்துவதற்க்கே பிரயோகிக்கப்படுகிறது. ஏனெனில் எமது மனமே துன்பத்தையும் துயரத்தையும் உருவாக்குகின்றது. இதன் மூலம், எமது மனதின் அதிபதியாகுவது மட்டுமல்லாது, தனிமனித ஆளுமையின் அதிபதியாகவும், எமது பௌதீக உடையான இந்த சரீரத்தின் அதிபதியாகவும் ஆக முடிகிறது.




ராஜயோகத்தினது முதலாவது பாடமான 'நான் ஓர் ஆத்மா', 'ஆத்ம உணர்வு' என்பவையே, இறுதியான நிலையான அனைத்து எதிர்மறைகளிலிருந்தும் விடுபட்ட, சம்பூர்ண நிலையினை அடைவதற்கு அத்திவாரமாகிறது.





No comments:

Post a Comment